×

கோடையின் கொடுமை தணிக்க நீர்மோர் கொடுப்போம்: கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்

சென்னை: கோடையின் கொடுமை தணிக்க நீர்மோர் கொடுப்போம் என கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில்:
தேர்தல் நேரத்தில் தீவிரமாக கடமையாற்றி பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்காக அரும்பாடுபட்டிருக்கும் தாமரை சொந்தங்கள் அனைவருக்கும் என் தாழ்மையான வணக்கத்தையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கோடை வெப்பத்தைத் தணிக்க பல பகுதிகளில் நம் பாஜகவினர் நீர்மோர்ப்பந்தல் அமைத்து, மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள். சென்னையில் நம் கட்சியின் தலைமை அலுவலகத்திலும் இன்னும் பல மாவட்ட அலுவலகங்களிலும், தினமும் நீர் மோர் வழங்கப்படுகிறது.

கொடிய நோய்த் தொற்றான கொரோனா காலத்தில் நாம் செய்த மக்கள் சேவையைப் போல, இந்தக் கோடை வெயில் தாக்கம் போக்க, தாகம் தீர்க்கும் இந்த நற்பணியை தமிழகம் முழுவதும், நம் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் பரவலாக மேற்கொள்ள வேண்டுகிறேன். அனைவரும், தங்கள் பகுதியிலே சாலை ஓரங்களில் நிழற்குடைகள் அமைத்தும், தண்ணீர் பந்தல்கள் அமைத்தும், நீர் மோர் வழங்கியும், தாகம் தீர்க்கும் உதவிகளை மக்களுக்கு தொய்வின்றி வழங்க உறுதி ஏற்போம்.

சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்திலிருந்து மக்களைக் காக்கும், இந்த சமூகப் பணியினை, ஒவ்வொரு பூத்திலும், மண்டலிலும், சக்தி கேந்திரத்திலும், மாவட்ட அளவிலும், மற்றும் மாநில அளவிலும் உள்ள அனைத்து தலைவர்களும், நிர்வாகிகளும், இன்னும் அணி, பிரிவுத் தலைவர்களும், அமைப்பாளர்களும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுகிறேன். அப்படி, தங்கள் பகுதியில் தாங்கள் மேற்கொண்டிருக்கும் நீர்மோர்ப் பந்தல் போன்ற நற்பணிகள் குறித்த புகைப்படத்துடன் கூடிய தகவல் விபரங்களை, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் என கூறப்பட்டுள்ளது.

The post கோடையின் கொடுமை தணிக்க நீர்மோர் கொடுப்போம்: கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : BJP ,president ,Annamalai ,Chennai ,Bharatiya Janata Party ,state president ,
× RELATED பொய் பேசும் ஒவ்வொரு முறையும் வழக்கு...